தந்தையின் அறிவுரை

அன்பு மகனே..!
உன் பேச்சில்
தாக்கத்தை ஏற்படுத்து.!
தூக்கத்தை ஏற்படுத்திவிடாதே..!

அன்பு மகனே..!
உன் சிரிப்பில்
ஆனந்தத்தை காட்டு.!
ஆணவத்தை காட்டி விடாதே..!

அன்பு மகனே..!
உன் கோபத்தில்
நியாயத்தை பேசு.!
காயத்தை ஏற்படுத்திவிடாதே..!

அன்பு மகனே..!
உன் நட்பில்
மகிழ்ச்சியை உருவாக்கு.!
இகழ்ச்சியை உருவாக்கி விடாதே..!

அன்பு மகனே..!
உன் அழுகையில்
அன்பை வெளிப்படுத்து.!
அச்சத்தை வெளிப்படுத்தாதே..!

அன்பு மகனே..!
உன் பாசத்தில்
பக்குவமாய் நடந்துகொள்.!
பல்லிழித்து விடாதே..!

அன்பு மகனே ..!
உன் ஆசையில்
அறத்தை பேணு.!
ஆபத்தை தேடிக்கொள்ளாதே..!

அன்பு மகனே ..!
உன் வீரத்தில்
விவேகத்தை காட்டு.!
வேகத்தை காட்டிவிடாதே..!

அன்பு மகனே ..!
உன் கருணையில்
தியாகத்தை காட்டு.!
துரோகத்தை காட்டி விடாதே..!

அன்பு மகனே ..!
உன் உதவியில்
மற்றவர்களை வாழச் செய்.!
தாழச் செய்துவிடாதே..!

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *