எப்போது புரியும் உமக்கு

சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்…
அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
சாத்தியத்தை கண்டும் அலட்சியமாய் பார்க்கிறாய்…
அசாத்திய இருளில் மூழ்கி இறக்கவே விரும்புகிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
படைத்தவனை விடுத்து கிடைத்தவனை வணங்குகிறாய்…
மடைதிரந்த வெள்ளமாம் மானுட வசந்தத்தை ஏற்க மறுக்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
அற்ப்ப வாழ்க்கையை ஆசையோடு தழுவுகிறாய்…
கர்ப்ப கோளறையில் பாதுகாத்தவனை வெறுக்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
சிந்திக்கத் தெரியாமல் சந்தியில் நிர்க்கிறாய்…
சந்திக்கும் நாள்தனை நித்தம் எதிர்க்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
படைத்தவன் உம்மை வழி கெடுப்பானா? வழி கெடுப்பவன் உம்மை படைத்தானா?
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
அறிவியல் வளர்ச்சியை கண்டு அதிசயிக்கும் மானிடனே…
அகிலத்தை படைத்தவனை அறிவதற்கு முடியவில்லையோ?
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
திறந்து பார் திருக்குர்ஆனை…
உன் மனக்கதவும் திறக்கப்படலாம்…
அன்புடன் முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *