• About
  • Contact
  • Privacy
  • Terms
  • Disclaimer
Monday, September 25, 2023
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்
Home தமுமுக

Unity is Strength | குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் தீர்வு என்ன?

in தமுமுக, இஸ்லாம்
ஒற்றுமை

ஒற்றுமை

11
SHARES
101
VIEWS
FacebookTwitterPinterestWhatsapp

Unity is Strength | குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் தீர்வு என்ன?

பொருளடக்கம்

  • Unity is Strength | குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் தீர்வு என்ன?
    • நபியின் முன்னறிவிப்பு
    • உஸ்மான் (ரலி) ஆட்சி
    • ஒற்றுமை இன்மை – குழப்பம் உங்களை அழித்துவிடும்
    • தந்தையின் அறிவுரை

நபியின் முன்னறிவிப்பு

சமுதாய அமைப்புகளை குறை பேசி திரியும் நபர்கள், சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என வருத்தப்படுபவர்கள், பிறைக்காக சர்ச்சை செய்து கொண்டிருப்பவர்கள் சிறிது நாட்களாக புலம்பக் கூடியதை அதிகம் பார்க்கிறோம். அது நடிப்போ அல்லது உண்மையின் வெளிப்பாடோ? எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஆட்சி அமைத்த நான்கு கலீபாக்களின் காலத்திலேயே ஒற்றுமை சீர்குலைந்தது. இது நபியின் முன்னறிவிப்பு மேலும், இது யுக முடிவு நாள் வரை தொடரும் என நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்து தான் உள்ளார்கள்.

எந்த அமைப்பும் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்புவதில்லை. அதுபோல் தற்காலத்தில் எந்தத் தனி மனிதரும் மனிதப் புனிதராகவும் இருக்கவில்லை.

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களின் ஒரு கருத்தை பாருங்கள்…

“நாங்கள் அபூபக்கர் ஆகவும் உமராகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்”

“ஆனால் நீங்கள் அபூபக்கர் காலத்து மக்களைப் போலவும், உமர் காலத்து மக்களைப் போலவும் இருப்பதற்கு தயார் இல்லை.”

இது எவ்வளவு உண்மையான வார்த்தை, ஒரு சமூகம் என்பது அதில் அங்கம் வகிக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் அடக்கம். நம்மில் நியாயமும், நேர்மையும், நீதியும், ஒற்றுமையும் இல்லை என்றால் அது ஒட்டுமொத்த சமூகத்திலும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.

உஸ்மான் (ரலி) ஆட்சி

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?

நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் உசாமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறி : உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5528

ஆக இந்த குழப்பங்கள், ஒற்றுமையின்மை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் தோன்றியதே… இது யுக முடிவு நாள் வரை தொடரத்தான் செய்யும்.

ஒற்றுமை
ஒற்றுமை

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்…
(அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில்) நான் இந்த மனிதரை (அலீ (ரலி) அவர்களை) நாடிப் புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு, “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் மகன் -அதாவது அலீ (ரலி)- அவர்களுக்கு உதவப்போகிறேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அஹ்னஃபே! திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து சண்டையிட்டு மடிந்)தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்”என்று கூறியதை நான் கேட்டேன்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! இவர் கொலைகாரர் (தண்டனை பெறுவது சரிதான்); ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன?” என்று கேட்கப்பட்டது. அல்லது நான் கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொல்லப்பட்டவரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்” என்று பதிலளித்தார்கள்” என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறி : அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5533

ஆகவே குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் நம் சமூகத்தின் மீது இறைவனால் ஏவப்பட்டது தான் அதிலிருந்து தவிர்ந்து கொள்வது எப்படி என்பதை மட்டும் தேடுவது தான் சரி. அந்த வழிகாட்டுதலையும் இஸ்லாம் வழங்கி தான் உள்ளது.

ஒற்றுமை இன்மை – குழப்பம் உங்களை அழித்துவிடும்

5529.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.

அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும்.

அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5529

மேற்குறிப்பிட்ட ஹதீஸின் அடிப்படையில் குழப்பங்களின் நேரத்தில் ஒன்று மௌனமாக இருக்க வேண்டும். அல்லது ஒரு புகலிடத்தை தேட வேண்டும். இதுவல்லாது அந்த குழப்பத்திற்குள் உள்ளே சென்றால் அந்தக் குழப்பம் உங்களை அழித்துவிடும்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) “ஆலியா”விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

பிறகு எங்களை நோக்கித் திரும்பி, “நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான்.

நான் என் இறைவனிடம், “என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே” என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான்.

அவனிடம் நான் “என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே” என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான்.

அவனிடம் நான் “(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது” எனப் பிரார்த்தித்தேன்.

ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறி : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5539

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்…

எமது முந்தைய பதிவை படிக்க…

தந்தையின் அறிவுரை

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

Tags: confusion disunitytmmkஇஸ்லாம்ஒற்றுமைகுழப்பம்சமுதாயம்
Share4Tweet3Pin1Send
Previous Post

Father advice – தந்தையின் அறிவுரை

Next Post

What is ChatGPT? சாட் ஜிபிடி என்றால் என்ன?

RelatedPosts

Dream Land
இஸ்லாம்

Dream Land | முஸ்லிம்களின் கனவு தேசம்

Welcome Ramadan
இஸ்லாம்

Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்
இஸ்லாம்

பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

  • Trending
  • Comments
  • Latest
Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Free ai Certificate Course1

Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

கூட்டு மனசாட்சி

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

சமுதாயப் பிளவு

சமுதாயப் பிளவு தேவையா?

Deepfake Technology

Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?

God's canon

God’s canon – இறைவனின் நியதி..!

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Children Mental Health Questions

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • 99 Subscribers
  • 647 Followers

பிரபலமானவை

  • Mental Health Awareness for Child

    Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

    20 shares
    Share 7 Tweet 5
  • Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

    14 shares
    Share 6 Tweet 4
  • Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

    13 shares
    Share 5 Tweet 3
  • Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

    13 shares
    Share 5 Tweet 3
  • AI Technology -யை பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்?

    12 shares
    Share 5 Tweet 3
Facebook Twitter Instagram Youtube Reddit Tumblr Pinterest Whatsapp

என்னைப்பற்றி

VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

தலைப்புக்கள்

  • அரசியல் (20)
  • இஸ்லாம் (11)
  • ஊடகம் (3)
  • கல்வி (6)
  • கவிதைகள் (21)
  • டெக்னாலஜி (9)
  • தமுமுக (6)
  • தளங்கள் (6)
  • தொடர்கள் (3)
  • பொருளாதாரம் (5)
  • ரெவின்யூ (4)
  • விழிப்புணர்வு (6)

Translate to Your Language

புதிய செய்திகள்

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM

No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM