எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி

அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்…
இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்…
அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்…
இன்று செல்வ சுகத்துக்காய் அழைகிறது பரிதாபம்…
அன்று சமூக தீமைகளை சத்தியத்தால் சாய்த்த சமுதாயம்…
இன்று பன்முக தீவினையின் அசத்தியத்தால் சாய்ந்த பரிதாபம்…
அன்று பக்கத்து வீட்டான் பசியை போக்கிய சமுதாயம்…
இன்று பக்கத்திலிருப்பவனை கூட பாராத பரிதாபம்…
அன்று மதுவை மண்ணில் கொட்டிய சமுதாயம்…
இன்று மதுவால் மண்ணில் புரளும் பரிதாபம்…
அன்றும் இன்றும் ஒரே இறை…
அன்றும் இன்றும் ஒரே மறை…
ஆனபோதும் மாற்றம் ஏனோ?
காரணம் தேடி அழைந்தோம் – கிடைத்தது விடை…
அன்று படிந்தது மனதில் இறை மறை…
இன்று படிந்தது மனதில் பெரும் கறை…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *