கொடி எதற்க்கு..!

கொடி தூக்கும் கழகமல்ல
கொள்கை காக்கும் கூடாரம்
மூவர்ணக் கொடி எதற்க்கு
மூக்கு துடைக்கவா?
கொள்கைக்கு கொடி எதற்கு
கோவணம் கட்டவா?
மூன்று நாள் கெடு எதர்க்கு
முகம் மறந்து போகவா?
ஆதாரத்தால் அடைந்துவிட்ட
சேதாரத்தை பாருங்கள்
ஆட்டு மந்தை போல நீயும்
அறிவிழந்து போனதேன்?
ஆட்டிவைக்கும் அண்ணனுக்கு
அடிமையாய் வாழ்வதேன்?
சத்தியத்தை கண்டபின்னும்
புத்திமாறி அழைவதேன்?
சதிகளையே விதிகளாக
ஏற்று நீயும் அழிவதேன்?
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *