தியாகத் திருநாள்

மண்ணுக்கு மாரடிக்கும் மடையர்களே
மகத்துவத்தை மறந்துவிட்ட மூடர்களே
வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்பதை போல
வீட்டிற்கு ஒரு ஆடறுக்கும் சடங்கு தானோ
நபி இப்ராஹீமின் இறை அச்சத்தை மறந்ததேனோ
நபி இஸ்மாயீலின் தியாகத்தை மறந்ததேனோ
அன்று வாங்கிய ஆடுகளை அன்றே அறுப்பது நியாயமா?
நபி இப்ராஹீமின் தியாகத்தை உணரத்தான் முடியுமா?
கடமைக்கும் பெருமைக்கும் ஆடறுக்கும் அவலம்
இம்மைக்கும் மறுமைக்கும் மிஞ்சுவது கேவலம்
காசு பணம் விரயமாய் போகுதே
நன்மைகள் யாவும் நாசமாய் ஆகுதே
மறுமைக்கு செய்ய வேண்டிய தியாகத்தை
பெருமைக்கு செய்கின்ற மக்களே
தியாகமும் அதனால் ஏற்படும் இறை அச்சமுமே
நமக்கு இறுதி மிச்சம் என்பதை உணருங்கள்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *