அஞ்சி ஓடாத நெஞ்சம்

உயிர் பிரியும் நேரத்திலும்
இறை கயிர் அறுந்திடுமோ..?
குறுதி வழிந்தோடும் நேரத்திலும்
எங்கள் உறுதி கறைந்தோடுமோ..?
வாள்கள் ஏந்திய காவிகள் கண்டு
எம் கால்கள் பயந்தோடுமோ..?
கள்ளம் கொண்ட அரசினை கண்டு
எம் உள்ளம் பதரிடுமோ..?
சத்தியம் வெல்ல சந்ததி சொல்ல
சபதம் ஏற்றிடுவோம்!
சக்கரம் போலே சுழல்வதி னாலே
சமூகம் காத்திடுவோம்!
கண்மணி நபியின் சொல்லினை ஏற்று
கண்ணியம் போற்றிடுவோம்!
தன்னம்பிக்கை கொண்டவனாக
தலைகள் நிமிர்ந்திடுவோம்!
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *