ஒளவியம் இல்லா ஒளரதன்

அச்சம் இல்லா ஆதவனாக அணிதிரள்வோம்
ஆணவம் இல்லா புனிதர்களாய் நாம் அணிதிரள்வோம்
இரக்கம் இல்லா மனிதர்களுக்கு எதிராய் அணிதிரள்வோம்
ஈடு இல்லா இறை துணையோடு நாம் அணிதிரள்வோம்
உரக்கம் இல்லா விழிகளோடு நாம் அணிதிரள்வோம்
ஊழல் இல்லா உலகை படைக்க நாம் அணிதிரள்வோம்
எதிரிகள் இல்லா சமூகம் உருவாக நாம் அணிதிரள்வோம்
ஏக்கம் இல்லா சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்
ஐயம் இல்லா வையம் படைக்க அணிதிரள்வோம்
ஒழுக்கம் இல்லா மனிதர்களை களையெடுக்க அணிதிரள்வோம்
ஓலம் இல்லா காலம் காண அணிதிரள்வோம்
ஒளவியம் இல்லா ஒளரதனாக நாம் அணிதிரள்வோம்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *