அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்ச பட்ச தாக்குதலால் ஒடுக்கி ஆண்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வஞ்சகத்தால் நெஞ்சகத்தில் கத்தி பட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
எங்கள்மீது தீவிரவாத பலி சுமத்தபட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சுத்தியாலும் கத்தியாலும் கருவருத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கூட்டு மன சாட்சி என கூச்சல் போட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கருத்து சுதந்திர போர்வையில் உலகே எதிர்த்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
தனதுயிரை துச்சமாக மதித்து நிற்கும் கூட்டமே
மத உணர்வை சீண்டினால் எதிர்த்து வீரம் காட்டுமே
சத்தியத்தை நெஞ்சகத்தில் தாங்கி நிற்கும் மக்களாய்
அஞ்சுவதும் கெஞ்சுவதும் இறைவனுக்கு மட்டுமே…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *