வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால்
கெஞ்சி நிற்குதடா தெருவோரம்…
கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால்
அஞ்சி ஓடுதடா தொலைதூரம்…
வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும்
கொஞ்சம் கூட இல்லையடா பரிதாபம்…
கொஞ்சி பேசாத ஆதங்கம்-அதனால்
பிஞ்சி மனங்களில் விபரீதம்…
நஞ்சி கொடுக்குதடா அரசாங்கம்-அதனால்
விஞ்சி நிர்க்குதடா மதச்சாயம்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *